கட்டுநாயக்க விமான நிலையத்தில் நால்வர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழுவினால் நான்கு இலங்கை பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
7 கோடி 50 லட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த 4 பயணிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு-02ஐ சேர்ந்த 57 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
பாதுகாப்பு கமரா
பின்னர், விமான நிலைய பாதுகாப்பு கமரா அமைப்பை கண்காணித்த பின்னர், இந்தக் கும்பலின் மற்ற 3 உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு வெல்லம்பிட்டியவை சேர்ந்த 45 வயது கணவருடன் 42 வயது மனைவியும், கொழும்பு - 15 இல் வசிக்கும் ஒரு தொழிலதிபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam