இலங்கையின் முன்னாள் தமிழ் கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த 73 வயதான அப்பாத்துரை, இளவயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்பறுத்தல் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் அப்பாத்துரைக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக சமூக சீர்திருத்த அடிப்டையிலான தண்டனை விதித்துள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அப்பாத்துரை இந்த தண்டனையை அனுபவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri