இலங்கையின் முன்னாள் தமிழ் கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த 73 வயதான அப்பாத்துரை, இளவயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்பறுத்தல் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் அப்பாத்துரைக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக சமூக சீர்திருத்த அடிப்டையிலான தண்டனை விதித்துள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அப்பாத்துரை இந்த தண்டனையை அனுபவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam