இலங்கையின் முன்னாள் தமிழ் கிரிக்கட் வீரருக்கு அவுஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்ட இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேசிய அணியின் சார்பில் முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அந்தனி அப்பாத்துரை என்ற வீரருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகர விமான நிலையத்தின் சுங்கப்பிரிவில் கடமையாற்றி வந்த 73 வயதான அப்பாத்துரை, இளவயது பெண் ஒருவர் மீது பாலியல் துன்பறுத்தல் மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
இளம் பெண்ணை பலவந்தமாக பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டது.
இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிமன்றம் அப்பாத்துரைக்கு சிறைத்தண்டனைக்கு பதிலாக சமூக சீர்திருத்த அடிப்டையிலான தண்டனை விதித்துள்ளது.
எதிர்வரும் 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் அப்பாத்துரை இந்த தண்டனையை அனுபவிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 21 மணி நேரம் முன்
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri