ஊடக சந்திப்பை புறக்கணித்து வெளியேறிய ரெலோவின் முன்னாள் எம்.பி
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டம் வவுனியாவில் இடம் பெற்றதன் பின்னர் ஊடக சந்திப்பில் ரெலோவின் சார்பில் கலந்து கொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்து வெளியேறியுள்ளார்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று (25.05) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
இதன்போது உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பிலும், தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிப்பது தொடர்பிலும் சுமார் 3 மணி நேர கலந்துரையாடல் இடம் பெற்றிருந்தது.
ஊடக சந்திப்பு
இதன் பின்னர் ஊடக சந்திப்பும் இடம் பெற்று இருந்தது.
இதன்போது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பொழுதிலும் ரெலோவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கலந்து கொள்ளாத பட்சத்தில் கோவிந்தன் கருணாகரனை குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு கூறப்பட்டிருந்தது.
எனினும் அவர் மறுப்பு தெரிவித்து இருந்தார்.
முடிவுகளில் மாற்றம்
தொடர்ந்தும் அவரை ஊடக சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரால் வலியுறுத்தப்பட்ட போதிலும், எடுக்கப்பட்ட முடிவுகளில் சில மாற்றங்கள் நிகழக் கூடும் எனவும் ஆகவே தான் இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொள்ள முடியாது எனவும் கூட்ட மேசையிலிருந்து எழுந்து சென்றிருந்தார்.
இதன் காரணமாக இந்தக் கூட்ட முடிவுகள் சில வேளைகளில் மாற்றங்களை ஏற்படுத்துமா? என்கின்ற ஐயப்பாடு ஏற்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் புளொட் தலைவர் த. சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் க. சுரேஸ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பில் கருணாகரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் சார்பில் செயலாளர் க.துளசி, சமத்துவக் சார்பில் மு.சந்திரகுமார் உட்பட உயர்மட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.






பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
