கொழும்பில் தம்பதி மீது துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸ் அதிகாரியின் மகன் - பின்னணி குறித்து வெளியான தகவல்
கொழும்பு, கொள்ளுப்பிட்டி 6வது தெருவில் உள்ள பாம் கோர்ட் அடுக்குமாடி குடியிருப்பில் முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் மகனால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தம்பதி காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதய குமார வூட்லர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த தம்பதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தம்பதி மீது துப்பாக்கி
துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகக் கூறப்படும் 51 வயதுடைய திருமணமாகாத நபர், பயன்படுத்திய துப்பாக்கி, அதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு வெற்று தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்த பெண் சந்தேகநபருடன் நீண்ட காலமாக நெருங்கிய உறவை பேணிவந்துள்ளார்.
நேற்று, முன்தினம் இரவில் வேறு ஒரு யுவதியையும் சந்தேகநபரின் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த குறித்த தம்பதி கிருலப்பனை பகுதியை சேர்ந்தவர்களாகும். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20