அடிமைகளை போல் வாழும் தமிழ் அகதிகள்: நீக்கப்படும் ஆதரவு கரம் (Video)
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தினால் புலம்பெயர்ந்து, இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள தமிழ் அகதிகள் அனைவரும் அடிமைகளை போல் வாழ்கின்றனர் என தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன் கவலை வெளியிட்டார்
லங்காசிறியின் சிறப்பு நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
''அகதிகளாக இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு இந்திய அரசு குடியுரிமை வழங்க வேண்டும். இல்லை என்றால் இலங்கைக்கு அவர்களை அழைத்து நிரந்தர தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
எனினும், தற்போது அவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது.
அடிமைகளை போலும், கட்டுபாடுகள் நிறைந்த சூழலிலும் அவர்கள் வாழக்கூடிய நிலையே தற்போது காணப்படுகிறது" என்றார்.
நாம் 200 நிகழ்வில் கலந்துகொள்வதற்காக சிறப்பு அழைப்பின் பேரில் தனது பூர்வீக நாடான இலங்கைக்கு வருகைதந்துள்ள பொன். ஜெயசீலன் மேலும் தெரிவித்த கருத்துக்களை தொடரும் காணொளியில் காணலாம்…
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri
