பாதாள உலக உறுப்பினர்களுக்கு மன்னிப்பே கிடையாது: பொலிஸ் மா அதிபர் எச்சரிக்கை
பாதாள உலக குற்றவாளிகளுக்கு இனிமேல் புரியும் மொழியில் பதில் சொல்ல தயார் என பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் தலைமையில் கொஸ்கொடவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், பாதாள உலகமும், போதைப்பொருள் கடத்தலும் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் வரை யுக்திய நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
குற்றங்களுக்கு தண்டனை
அப்பாவி மக்களை கொன்றுவிட்டு குற்றச்செயல்களில் ஈடுபடும் பாதாள உலக உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கப்போவதில்லை.
அவர்கள் செய்த குற்றங்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பதிலளிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |