தமிழர்களின் பூர்வீக காணிகளைத் திருடும் வன இலாகா திணைக்களம் : ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு
வனவளத் திணைக்களம் தமிழ் மக்களின் பூர்வீக குடியிருப்பு மற்றும், விவசாயக் காணிகளை அடாவடித்தனமாக அபகரித்துவிட்டு, அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு மறுப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(03) இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நூதனமான முறையில் திருடி
மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்தசில நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நான் மேற்கொண்ட களவிஜயத்தின்போது, அரசாங்கத்தின் சில திணைக்களங்கள் நூதனமான முறையில் தமிழ் மக்களின் காணிகளை திருடிவருவதை அவதானிக்க முடிந்தது.
குறிப்பாக வனவளத்திணைக்களம், தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய திணைக்களங்கள் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கு முரணாக பொதுமக்களின் காணிகளைத் திருடி வருகின்றார்கள்.
பொதுமக்களின் குடியிருப்புக்காணிகளையும், அவர்களின் வயல் நிலங்களையும், வர்த்தமானி அறிவித்தல் முலம் சட்டத்திற்கு முரணான வகையில் வன ஒதுக்குப்பிரதேசங்களாக, தொல்லியல் ஒதுக்குப் பிரதேசங்களாக ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளார்கள்.
இதனால் இங்குள்ள மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக்களில் குடியிருக்க முடியாமல், வயல் நிலங்களில் பயிரிட முடியாமல் இத்திணைக்களங்களால் துரத்தியடிக்கப்படுகின்றார்கள்.
இதனால் அவர்களுடைய வாழ்வாதாரம், அவர்களுடைய அன்றாட உணவுத்தேவை, அவர்களுடைய பிள்ளைகளின் கல்வி என்பன மறுக்கப்படுகின்றன.
ஊழலுக்கு எதிரான கோசத்துடன்
ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரவின் அம்பகாமம் பகுதியில் இலங்கை விமானப்படையின் விமானப்படைத்தளம் அமைப்பதற்கு, ஒதுக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து 8000ஏக்கர் வனப்பகுதிகள் துப்பரவு செய்யப்பட்டுள்ளன.
வனவளத்திணைக்களத்தின் அனுமதி இன்றி, குறித்த சட்ட ஏற்பாடுகள் எவற்றையும் பின்பற்றாது, இந்த அடர்வனப்பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதுடன், இங்குள்ள பெறுமதியான மரங்கள் இரகசியமான விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஊழலுக்கு எதிரான கோசத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள அரசு இதுதொடர்பில் வெளிப்படையான விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும்.
சமகாலத்தில் நாம் மிகவும் வேதனைப்படவேண்டிய விடயம் என்னவெனில் வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் போன்ற திருட்டுத் திணைக்களங்களில் உயர் அதிகாரிகள் நீதிபதிகளாக மாறிவிட்டனர்.
வடக்கு மாகாணத்திலுள்ள மாவட்டச் செயலகங்கள் தோறும் வனஒதுக்குப் பிரதேசங்களை விடுவிப்பதாகக்கூறி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவில் இன்றுமுதல் அமுலுக்கு வரும் மசோதா - 20 மில்லியன் தொழிலாளர்களுக்கு நன்மை News Lankasri

viral video: படமெடுத்து நின்ற ராஜ நாகத்திடம் சேட்டை காட்டிய நபர்... இறுதியில் என்ன நடந்தது தெரியுமா? Manithan
