இலங்கை வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு நேர்ந்த விபரீதம்
பேருவளை மொரகல்ல கடற்கரையில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ருமேனிய நாட்டை சேர்ந்த 71 வயதான ஒருவரே இன்று புதன்கிழமை (7) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மொரகல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், ஹோட்டலுக்கு அருகிலுள்ள கடற்கரையில் நீராடிய போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
நீரில் மூழ்கிய வெளிநாட்டவரை கரைக்கு கொண்டு சென்று பேருவளை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர் உயிரிழந்திருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவரது சடலம் பேருவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரண விசாரணைக்காக களுத்துறை - நாகொடை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
