அவசர விஜயமாக இலங்கை வருகின்றார் இந்திய வெளியுறவு செயலாளர்!
இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா (Harsh Vardhan Shringla) அவசர விஜயமாக இலங்கை வரவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டோபர் 2ம் திகதி முதல் 5ம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கிருப்பார் என புது தில்லி தகவல்கள் கூறியுள்ளன.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் நியூயார்க்கில் நடந்த ஐநா அமர்வின் போது சந்தித்து பேசியிருந்தனர்.
இந்நிலையிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தலைதூங்கியுள்ள நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 14 மணி நேரம் முன்

இந்தியாவை உலகத் தடைகளிலிருந்து ஈரான் ரகசியமாகக் காப்பாற்றியது எப்படி? பேசப்படாத பின்னணி News Lankasri

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
