இலங்கை வரலாற்றில் முதன் முறையாக கல்வி அமைச்சு எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபர் தெரிவு செய்யப்படவுள்ளார்.
இலங்கை கல்வி அமைச்சு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது.
இதுவரை காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை அனுபவத்தின் கீழ் கல்வி நிர்வாக சேவையின் முதல்தர அதிகாரிகள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்துள்ளனர்.
எவ்வாறாயினும், தற்போது பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பதவிக்காக பொருத்தமான தேர்ச்சி மட்டத்தை கொண்டிருப்பவர்கள் கல்வி அமைச்சரின் நிர்வாக சேவையில் இல்லையென்பதால் இவ்வாறு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தேர்ந்தெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக இவ்வாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விண்ணப்பங்களின் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri