பணிப்பகிஷ்கரிப்புக்கு ஆதரவளிக்காத சுகாதார ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
பணிப்பகிஷ்கரிப்பு ஆதரவளிக்காமல் நோயாளர்களின் நலன் கருதிச் செயற்பட்ட சுகாதார ஊழியர்களைப் பாராட்ட சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஆலோசனைக்கமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் தொழிற்சங்கங்களினால் மேற்கொள்ளப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பின் போது கடமையிலிருந்த மருத்துவர்கள் முதல் சிற்றூழியன்கள் வரையான விபரங்கள் திரட்டப்படவுள்ளன.
அதனை அடுத்து அவர்களுக்கான பாராட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.