ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம்
பாடசாலை ஆசிரியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை விரைவில் திறக்க வேண்டுமாயின் பாடசாலைகளுக்குள் போதியளவு சுகாதார வசதிகளை உறுதி செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதாகவும், ஏனைய மாகாணங்களிலும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.