சாதாரண தர, உயர்தரப் பரீட்சைகள் நடைபெறும் காலத்தை மாற்றியமைப்பது குறித்து கவனம்
க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகள் நடத்தப்படும் காலத்தை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி சாதாரண தரப் பரீட்சையை ஆகஸ்ட் மாதத்திலும் உயர்தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பு கொள்கையின் கீழ் இந்த யோசனைத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
மாணவ மாணவியரின் காலம் விரயமாவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு பரீட்சைக் காலத்தை மாற்றியமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டு அடுத்த ஆண்டளவில் இந்த புதிய நேர அட்டவணையின் பிரகாரம் பரீட்சைகளை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 11 மணி நேரம் முன்
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam