யாழ். நெடுந்தீவு ஐவர் கொலை விவகாரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான புதிய தகவல்

Jaffna Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani Apr 24, 2023 03:12 AM GMT
Report

யாழ். நெடுந்தீவு பகுதியில் வீடொன்றிலிருந்து ஐந்து பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் புங்குடுதீவில் சந்தேகநபரை கைது செய்ததை அடுத்து கொலைச் சம்பவம் தொடர்பான பல தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

சந்தேகநபரான 51 வயதான நபர் 25 வருடங்களாக ஜெர்மனியில் வசித்து வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு நாடு திரும்பிய நிலையில், அவரது குடும்பத்தினர் தற்போதும் ஜெர்மனியில் வசித்து வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகபர் ஜெர்மனியில் குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டுள்ளாரா என்பதினை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

யாழ். நெடுந்தீவு ஐவர் கொலை விவகாரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான புதிய தகவல் | Five People Murdered In Nedundivi Jaffna

போதைப்பொருள் பாவனை

அத்துடன், அவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியிருந்த நிலையில், மன அழுத்தத்திற்கும் உள்ளாகியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் கடந்த 19 ஆம் திகதி நெடுந்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், நெடுந்தீவை வசிப்பிடமாகக் கொண்ட 74 வயதான கார்த்திகேசு நாகசுந்தரி என்பவர் தனது வீட்டின் அறையொன்றை சந்தேகநபருக்கு வாடகைக்கு வழங்கியமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யாழ். நெடுந்தீவு ஐவர் கொலை விவகாரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான புதிய தகவல் | Five People Murdered In Nedundivi Jaffna

இதன்போது குறித்த நபர் வீட்டில் தங்கியிருந்த போது வீட்டு உரிமையாளரின் உறவினர்கள் நால்வர் குறித்த வீட்டிற்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் முல்லைத்தீவில் இருந்து தம்பதியொன்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 2 பெண்களும் அடங்கியுள்ளனர்.

இதனை நன்கு அவதானித்த சந்தேகநபர் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் நால்வரையும் கூரிய ஆயுதங்களினால் தாக்கி தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு புங்குடுதீவில் உள்ள தனது வீட்டிற்கு தப்பிச்சென்றுள்ளமையும் தெரியவந்துள்ளது.

தாக்குதல் இடம்பெற்ற போது வீட்டிலிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அயல் வீட்டிலிருந்து சென்ற 75 வயதான சுப்ரமணியம் மகாதேவா என்பவரும் சந்தேகநபரால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வீட்டிலிருந்த ஐவரில் 101 வயதான கனகரத்தினம் பூரணம் என்பவர் கடும் காயங்களுடன் உயிர் தப்பியிருந்ததாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவு கூறியுள்ளது.

யாழ். நெடுந்தீவு ஐவர் கொலை விவகாரம்! சந்தேகநபர் தொடர்பில் வெளியான புதிய தகவல் | Five People Murdered In Nedundivi Jaffna

இந்த நிலையில், சந்தேகநபரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்திற்கு அமைய 74 முதல் 83 வயதுகளையுடைய 5 பேரையும், தாமே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த கொலைகளை செய்தமைக்கான காரணத்தை சந்தேகநபர் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.     

  

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US