எல்லையைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஐந்து இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, அவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
படகுகள் மீட்பு
TN 06 mm 477 எண் கொண்ட விசைப்படகில் கோடியாக்கரையில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த ஐந்து கடற்றொழிலார்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய படகும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட ஐந்து இந்நிய கடற்றொழிலாளர்களையும் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு கடல் வளத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சபையில் டக்ளஸிடம் தயாசிறி கேள்வி |
கடற்றொழில் நீரியல் வள திணைக்களம்
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் நாளைய தினம் மயிலட்டி கடற்தொழில் நீரியல்
வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர்
நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த இரண்டு நாட்களில் 17 தமிழக கடற்தொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்: தீபன்