12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கையின் கடல் எல்லையைத் தாண்டி யாழ்ப்பாணம் - பருத்தித்துறைக் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, அவர்கள் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடல் அலையில் சிக்கி யுவதி பரிதாப மரணம் |
படகு மீட்பு
இதன்போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திய படகும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச்
செல்லப்பட்டுள்ளனர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.