பாடசாலையில் மடிக்கணினிகளை திருடியவர்கள் கைது
களுத்துறை - பேருவளை பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் வகுப்பறையை உடைத்து மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது, இன்று (25.03.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், அடுத்த வருடம் க.பொ.த பொதுப் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய மாணவர்கள் இருவர் மற்றும் பாணந்துறை, பாதுக்க பிரதேசங்களில் வசிக்கும் மூவர் இணைந்தே நவீன வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளை திருடியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
மேலும், கடந்த பெப்ரவரி மாதம் பாடசாலையின் வகுப்பறைக்குள் மடிக்கணினி உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, குறித்த பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் மடிக்கணினிகளை விற்பனை செய்ய முற்பட்டதாக பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மாணவர்களிடம் நடத்திய விசாரணையில், பாணந்துறை - பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த மூவரை தொடர்பு கொண்டு மடிக்கணினிகளை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்தே, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 12 மடிக்கணினிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
