கொழும்பில் சட்டவிரோதமாக இயங்கி வந்த விடுதியொன்று பொலிஸாரால் முற்றுகை
கொழும்பின் புறநகர் மொரட்டுவையில் இயங்கி வந்த சட்டவிரோத விடுதியொன்றினை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்பட்டு வரும் “லுனாவ பட்ரி” பெட் உட்பட்ட இரண்டு ஆண்களும், மூன்று பெண்களும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்காலிகமாகத் தங்குமிடங்களை வழங்கி வரும் அறைகள் என்ற தோரணையில் இந்த விடுதி இயங்கி வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது விடுதியின் முகாமையாளர் தப்பிச்சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகளைச் சேர்ந்த 42க்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்படுத்தல் சட்டம் அமுலிலுள்ள நிலையில் விடுதி இயக்கப்பட்டமை கடுமையான சட்ட மீறலாகும் என்று காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.