பாதீடு குறித்து மீனவர் சங்கத்தினர் அதிருப்தி

Indian fishermen Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lanka Fisherman
By Chandramathi Nov 26, 2022 03:28 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் மீன்பிடித் தொழில் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

“ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் உப்பு நீர் மீன்பிடித் தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. நன்னீர் மீன்களை வளர்ப்பதற்குப் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதிலும் உள்ள பெரும்பான்மையான கடற்தொழிலாளர்களுக்கு ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை”என வடமாகாண கடற்தொழிலாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரும், மன்னார் மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

கடல் வளங்களை கொள்ளையடிக்கும் இந்திய கடற்தொழிலாளர்

பாதீடு குறித்து மீனவர் சங்கத்தினர் அதிருப்தி | Fishermen S Association Is About Contribution

எல்லைத் தாண்டி வந்து நாட்டின் கடல் வளங்களை கொள்ளையடிக்கும் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல், எரிபொருள் விலையேற்றம், எரிபொருளை கடற்தொழிலாளர்களுக்கு வழங்குவதற்கான உரிய விநியோகமுறை இன்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பிடிபட்ட மீன்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் ஆகிய காரணங்களால் மீன்பிடி தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக கடற்தொழிலாளர் சங்க தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தின் போது மன்னாருக்கு சென்ற சமயத்தில், வடமாகாண கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்காமைக்கு கவலை வெளியிட்டுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் சங்கத்தின் பேச்சாளர், தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் வடக்கு கடற்தொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் இலக்கு

பாதீடு குறித்து மீனவர் சங்கத்தினர் அதிருப்தி | Fishermen S Association Is About Contribution

இந்திய கடற்தொழிலாளர் வந்து எங்கள் கடலை நாசம் செய்வதை யாரிடம் சொல்வது? மக்கள் நலனை தேடிப் பார்க்கின்றார்கள் எனின் மக்களைச் சந்திக்க ஏன் அச்சம் என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மன்னார் விஜயமானது மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதை விட இங்குள்ள வளங்களை அரசாங்கம் எவ்வாறு பெற முடியும்? அல்லது யாருக்காவது எப்படி இதனை விற்பனை செய்ய முடியும் என்பதை ஆராயும் வகையிலேயே அமைந்துள்ளது.

மன்னாரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மீனவத் தலைவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இதே சிந்தனையுடனேயே நடுக்குடா பகுதிக்கு வந்ததாகவும், ஆனால் சில நாட்களில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பினால் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் இலக்குகளுடன் மன்னாருக்கு வந்துள்ளார் என கூறியுள்ளார்.

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US