இலங்கை கடற்படைக்கு எதிராக தங்கச்சிமடத்தில் போராட்டம்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 கடற்தொழிலார்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று சனிக்கிழமை ( 21.02.2026 ) காலை கடற்தொழிலார்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் கடற்தொழில் துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை கடற்தொழிலுக்குச் சென்ற நான்கு படகுகளையும், அதிலிருந்த 22 கடற்தொழிலார்களையும் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர்.
யாழ்ப்பாணம் சிறைச்சாலை
இவ்வாறு கைது செய்யப்பட்ட 22 கடற்தொழிலார்களும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 கடற்தொழிலார்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கடற்தொழிலார்களையும், விடுதலை செய்யப்படாமல் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப் படகையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் கடற்தொழிலார்கள் கண்டன போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசிடம் வலியுறுத்தி சிறையில் உள்ள கடற்தொழிலார்களை விடுதலை செய்ய வேண்டும் என இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது
இந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென பெண் ஒருவர் மயங்கியுள்ளார்.இதையடுத்து பெண்ணுக்கு தண்ணீர் கொடுத்து நிழலில் அமர வைத்தனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் இடத்திற்கு களமிறக்கப்படும் ஆயுதப்படை..! இரகசிய நகர்விற்கு எதிராக தயாராகும் அதிரடி நடவடிக்கை
உலக நாடுகள் மீது டிரம்ப் விதித்த வரி விதிப்பு ரத்து: அமெரிக்க உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு News Lankasri