கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் பாதிப்பு: வடக்கு மீனவ பிரதிநிதி கவலை
கடற்தொழிலாளர்கள் தொடர்ந்தும் சட்டவிரோத தொழில்களால் பாதிக்கப்படுவதாக வடக்கு மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் இன்று நடத்திய ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
கடற்தொழிலாளர்கள் பாதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், விவசாயிகளுக்கு பிரச்சினை எனில் குரல் கொடுக்கும் அவரசில்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள், கடற்தொழிலாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்படும் போதும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.
தற்போது கடலில் ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை மற்றும் கடலட்டை தொழில்கள் அதிகரித்துள்ளன. அதனை மீன்பிடி அமைச்சரோ, கடற்படையோ அல்லது நீரியல் வளத்துறையோ கண்டுகொள்வதில்லை.
கடற்படையினரின் கைது நடவடிக்கை
அதிகமான சட்டவிரோத தொழிலாளர்கள், எல்லை தாண்டிய இந்திய கடற்தொழிலாளர்களை முல்லைத்தீவில் கடற்படையினர் கைது செய்து வருகின்றனர்.
எனினும் மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
