புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதல் அமர்வு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் முதல் அமர்வு இன்று(27) காலை 10.00 மணிக்கு தவிசாளர் வே.கரிகாலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
22 உறுப்பினர்களை கொண்ட பிரதேச சபையில் 11 உறுப்பினர்கள் தமிழரசு கட்சியின் உறுப்பினர்களாவர்.
தமிழரசு கட்சியால் சபையின் தவிசாளர் உப தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்ட நிலையிலேயே சபையின் முதல் அமர்வு நடைபெற்றுள்ளது.
நடைபெற்று முடிந்த பிரதேச சபை தேர்தலில் தமிழரசு கட்சி 11 உறுப்பினர்களும்,ஜனநாயதமிழ்தேசியக்கூட்டமைப்பு 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி 4 உறுப்பினர்களும், ஐக்கியமக்கள் சக்தி01 உறுப்பினரும்,அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் 1 உறுப்பினரும்,அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் 1 உறுப்பினரும் ஸ்ரீலங்கா தொழிலாளர்கட்சி 1 உறுப்பினரும்,சுயேட்சைக்குழு 2 உறுப்பினர்களுமாக மொத்தம் 22 உறுப்பினர்களை கொண்ட சபையாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






