மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம்

Anura Kumara Dissanayaka Sri Lanka Saliya Pieris General Election 2024 National People's Power - NPP
By Sivaa Mayuri Nov 15, 2024 05:41 AM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

 இதுவரையிலான தேர்தல் முடிவுகளில் இருந்து, தேசிய மக்கள் சக்தி, நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் அல்லது அதனை விட சிறிய எண்ணிக்கை குறைவான ஆசனங்களை பெறும் என்று எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ் இந்த எதிர்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றால், விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவது இதுவே முதல் முறையாக இருக்கும்.

இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி! இறுதி முடிவு வெளியானது

இரத்தினபுரியில் அதிக வாக்குகளைப் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி! இறுதி முடிவு வெளியானது

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

2010 இல் மக்கள் கூட்டணியும் 2020 இல் பொதுஜன பெரமுனவும், மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாக ஆசனங்களை பெற்றதால்,மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற சில எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டியிருந்தது.1994 ஆம் ஆண்டு பிரதமர் சந்திரிக்கா குமாரதுங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதித் தேர்தல் இந்த வெற்றிக்கான ஒரே சமாந்தரமாகும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம் | First Government Majority Npp

வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்தி, கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ளது, இதன் மூலம் இலங்கையில் உள்ள பலதரப்பட்ட சமூகங்களை ஒன்றிணைக்கக்கூடிய தலைவராக தற்போதைய ஜனாதிபதி செயற்படமுடியும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவாக நிறைவேற்றுவதற்கு இந்த தேர்தல் முடிவு வழி வகுக்கும்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் நாட்டின் திசையில், குறிப்பாக அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.என்பதற்கு இந்த மாபெரும் வெற்றி ஒரு சான்றாகும்.எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், வரும் ஆபத்துக்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கண்டி மாவட்டம்! இறுதி முடிவுகள் வெளியாகின

கண்டி மாவட்டம்! இறுதி முடிவுகள் வெளியாகின

இலங்கை அரசாங்கம்

தற்போதைய ஜனாதிபதி கூறியது போல் கடந்த காலங்களில் அரசியல் சக்திகள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறும் சட்டங்களை இயற்றினர்.எனவே ஜனநாயக உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை சிதைக்கும் சட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை இயற்றுவதற்கான செயற்பாடுகளை தேசிய மக்கள் சக்தி எதிர்க்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறும் முதல் அரசாங்கம் : சட்டத்தரணிகள் சம்மேளனம் பெருமிதம் | First Government Majority Npp

பொருளாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களின் வாழ்க்கையை உயர்த்தவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், ஊழலைச் சமாளிக்கவும், தேசிய நல்லிணக்கப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், அரசியலமைப்பு சீர்திருத்தத்தை இயற்றவும், ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும் எதிர்பார்க்கும் வாக்காளர்களின் அசாதாரண எதிர்பார்ப்புகளை புதிய ஆட்சி நிர்வகிக்க வேண்டும்.

தேசிய மக்கள் சக்தியின் தலைமையானது, அதன் புதிய மற்றும் ஒப்பீட்டளவில் அனுபவமற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்; மற்றும் அமைச்சர்கள் கட்சி இதுவரை கடைப்பிடித்து வந்த கொள்கை நிலைகளில் இருந்து விலகிச் செல்லாமல் இருப்பதையும், அவர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை மீறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

மக்களால் அதிக பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட கடந்த கால அரசாங்கங்களின் தலைவிதியை தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே புதிய அரசாங்கம் வெற்றியடையும் என்று நாம் நம்புவோம்;. இலங்கை அரசாங்கம் மீண்டும் தோல்வியடைவதை தாங்கிக்கொள்ள முடியாது என்றும் சாலிய பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டியடித்த அநுர அலை

பொதுத் தேர்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டியடித்த அநுர அலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US