டெவோன் நீர்வீழ்ச்சி சுற்றுவட்டப் பகுதியில் தீப்பரவல்!
உலகப்புகழ்பெற்ற டெவொன் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 6 அறைகளைக் கொண்ட ஒரு கபான முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புல்ல- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டகலை தலவாக்கலை டெவொன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள 50 ஏக்கர் கொண்ட காட்டுப்பகுதியிலேயே குறித்த சம்பவம் இன்று(8.3.2026)ஏற்பட்டுள்ளது.
அத்துடன் சுமார் 25 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பாதுகாப்பு நிலப்பகுதி அழிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீப்பரவல்
சுற்றுலா வீடுதிக்கு சொந்ததான கபானா எரிவடைந்ததனால் தளபாடங்கள் உள்ளிட்ட அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
இதனால்; கொட்டகலை நுவரெலியா பிரதானவீதி புகையினால் மூடப்பட்டுள்ளது.
குறித்த தீயினைக் கட்டுப்படுத்துவதற்கு அட்டன் நகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் திம்புல்ல பத்தினை பொலிஸார் இணைந்து தீயினைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தீ விபத்து காரணமாக மின் இணைப்புக்கள், தொலைபேசி இணைப்புக்கள் ஆகியன தீயினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
வனப்பகுதி அழிவடைந்ததனால் எமது நாட்டிற்கே உரித்தான அரியவகை தாவரங்கள் சிறிய உயிரினங்கள் மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை அளிவடைந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
கோரிக்கை
இதேநேரம் நீர்ப்பாசனப் பகுதியில் குறித்த தீ ஏற்பட்டுள்ளதனால் நீருற்றுக்கள் அற்றுப்போகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
தீ விபத்துக்கான காரணம் உறுதி செய்யப்படாத போதிலும் இனந்தெரியாதவர்களால் இந்தத் தீ வைக்கப்பட்டிருக்கலாம் என பிரதேசவாகிகள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

வறட்சியான காலநிலையை அடுத்து காற்று வேகமாக வீசுவதால் தீயினைக் கட்டுப்படுத்துவது முடியாத காரியமாகியுள்ளது.
எது எவ்வாறான போதிலும் குறித்த தீவைப்புக்கள் காரணமாக மலையகத்தில் பல பகுதிகளில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
எனவே குறித்த தீ வைப்பு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு தேவை நடவடிக்கைகளை உடன் பொறுப்பு வாய்ந்தவர்கள் எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.






கனேடிய மற்றும் இந்திய வம்சாவளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள புதிய ஆன்டிபயாட்டிக்: பயனுள்ள ஒரு தகவல் News Lankasri