கடன் வாங்க சொத்து இல்லையென்றால்..! அரசாங்கத்தின் புதிய திட்டம் - ஜனாதிபதி அறிவிப்பு
கடன் வாங்க சொத்து இல்லையென்றால் பெண்களுக்குத் தேவையான சான்றிதழை அரசாங்கம் வழங்கக் கூடிய ஒரு திட்டம் தயாரிக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (08.03.2026) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
விரிவடையும் மத்திய கிழக்கின் போர்களம்! துபாய்க்கு அதிர்ச்சி கொடுத்த ஈரான் - பதற்றத்தில் வளைகுடா நாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், பெண்கள் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், அரசாங்கம் அவர்களுக்கு பணம் செலுத்தும். நுண்நிதி கடன்களுக்கான வட்டி விகிதம் காரணமாக கிராமங்களில் ஏராளமான பெண்கள் இறந்துள்ளனர்.
கடன் பொறி
கிராமப்புற பெண்கள் இந்தக் கடன் பொறியில் பலியாகிவிட்டனர். பெண்களை இதிலிருந்து விடுவிப்பதற்காக சட்டங்கள் வகுக்கப்படுகிறது.

திட்டத்தை வெற்றிகரமாக கண்காணித்து செயல்படுத்துவதற்காக சலுகை வட்டி விகிதத்தில் கடன்களை வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு