கொட்டகலை- ஸ்டோனிகிளிப் வனபாதுகாப்பு பகுதிக்கு தீ வைப்பு!
திம்புல்ல- பத்தினை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ஸ்டோனிகிளிப் வனபாதுகாப்பு பிரிவுக்கு இனந்தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர் வளமான காட்டுப்பகுதி தீயினால் அழிவடைந்துள்ளன.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(28.2.2026) இடம்பெற்றுள்ளது.
கொட்டகலை நகர பிரதேச மக்கள் உட்பட்ட கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த வனப்பகுதியிலிருந்தே நீர் வடிகால் அமைப்பு சபையின் மூலம் குடிநீர் பெற்றுக் கொடுக்கப்படுகின்றன.
குடிநீர் தட்டுப்பாடு
இந்த பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளதனால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் எதிர்காலத்தில் பாரிய குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
மலையகப் பகுதியில் தற்போது வறட்சியான காலநிலை காணப்படுவதானாலும் காற்று வீசுவதனாலும் தீ வேகமாக பரவி வருகின்றன.இதனால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதாக கடினமானதாக காணப்படுவதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.

குறித்த தீ காரணமாக எமது நாட்டுக்கே உரித்தான அறிவகை தாவரங்கள் முலிகை செடிகள்,சிறிய வகை உயிரினங்கள் அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
தீ வைப்பு
வறட்சியான காலங்களில் வனபிரதேசங்களுக்கு தீ வைக்கப்படுவதனால் நீரூற்றுக்கள்அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும்,அத்தோடு சிறுத்தை பன்றி,உள்ளிட்ட கொடிய விலங்குகள் உணவு தேடி மனிதர்கள் வாழும் பிரதேசங்களுக்கு வரக்கூடும் என பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்தோடு இந்த தீ வைப்பு மீருகங்களை வேட்டையாடுவதற்கு அல்லது பொழுது போக்குக்காகவோ அல்லது மழை பெய்யும் என்ற மூட நம்பிக்கையில் வைத்திருக்கலாம் என பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
எது எவ்வாறான போதிலும் காடுகளுக்கு தீ வைப்பதனால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்படுவதனால் தீ வைப்பவர்களை உடனடியாக கைது சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri