தலவாக்கலையில் கடையொன்றில் தீவிபத்து: பொலிஸார் விசாரணை (Video)
தலவாக்கலை நகரில் பழங்கள் மற்றும் மரக்கறி விற்பனை செய்து வந்த கடை ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்தீ விபத்து நேற்று இரவு 10 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலங்களுக்குப் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
இதேவேளை குறித்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரின் உதவியாளர் கடையில் இல்லாத போதே இச்சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயினால் மரக்கறி மற்றும் பழங்கள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. எனினும், தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தலவாக்கலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



