காத்தான்குடியில் பிரபல தனியார் நிறுவனத்தில் தீப்பரவல்!
மட்டக்களப்பு - காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் திடீரென தீப்பற்றிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த தனியார் நிறுவனத்தில் தீப்பரவல் ஏற்பட்ட போது அதனை அவதானித்த அருகிலுள்ள வியாபார நிலையங்களின் ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைக்கும் படையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீயை முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரைக்கும் கண்டறியப்படாத நிலையில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.



365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam