சீனத் தூதரகத்தினால் யாழ்.பல்கலைக்கழகத்திற்கு நிதியுதவி
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் நலச்சேவைகளுக்கென சீனத் தூதரகத்தினால் ரூபா 43 இலட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
நிதியுதவி

கொழும்பிலுள்ள சீனத் தூதரகத்தில் வைத்து, இலங்கைக்கான சீனத் தூதுவர் சி சென்ஹொங், யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜாவிடம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சீனத்தூதுவரின் முதற் செயலாளர் லீ ஜிங்ரே, யாழ்.பல்கலைக்கழக மாணவர் நலச் சேவைகள் பணிப்பாளர் கலாநிதி சி.ராஜ் உமேஸ், சீனத்தூதுவர் நிதியுதவிக்கான யாழ்.பல்கலைக்கழக இணைப்பாளர் கலாநிதி மு.தணிகைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
புலமைப்பரிசில் திட்டம்

2016 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு சீனத் தூதுவரின் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் நிதியுதவி பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கும், கிழக்கு பல்கலைக்கழகத்துக்கும் மட்டுமே முழுத் தொகையும் பங்கிட்டு வழங்கப்பட்டுள்ளது.
சீனத் தூதரகத்தின் இந்த நிதியுதவியின் கீழ் மாணவர்களுக்கான மாதாந்த உதவிப்பணம்
உட்பட பல நலனோம்புச் செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பல்கலைக்கழக
நலச்சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan