வரி நிலுவைகள் வசூலித்தல் தொடர்பில் நிதியமைச்சகம் மேற்கொண்டுள்ள தீர்மானம்
இலங்கையின் நிதியமைச்சகம் வரி நிலுவைகளை வசூலிப்பதற்கான ஒரு செயல் திட்டத்தை முன்வைக்கவுள்ளது.
அண்மைய புள்ளிவிவரங்கள் அரசின் வருவாய் ஆண்டு இறுதிக்குள் 529 பில்லியனால் குறையும் என்று காட்டியுள்ள நிலையிலேயே இந்த செயல் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது.
நாட்டின் வரி வசூல் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் அதிருப்திகளுக்கு மத்தியில், ஒரு நடவடிக்கைக் குழு, வருவாய் சேகரிப்பை விரைவுபடுத்தும் என்று திறைசேரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும்
இதன்படி, சொத்து மற்றும் வங்கிக் கணக்குகளை பறிமுதல் செய்வது மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்வது போன்ற நடவடிக்கைகளும் இந்த செயற்பாடுகளில் அடங்கும் என்று அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை வருவாயை வசூலிக்கும் உத்தேச நடவடிக்கைக் குழுவில் தொழிற்சங்கப்
பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

TRP-வில் புதிய உச்சத்தை தொட்ட எதிர்நீச்சல் சீரியல்.. இதுவரை இவ்வளவு ரேட்டிங் வந்ததே இல்லை Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri
