சீனத் தூதுவருக்கும் அலி சப்ரிக்கு இடையில் முக்கிய சந்திப்பு
இலங்கைக்கான சீனத் தூதுவர் எச்.இ. ஜீ சென் அங், நிதியமைச்சர் அலி சப்ரியை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
இச் சந்திப்பானது இன்றையதினம் நிதியமைச்சகத்தில் இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய ஒத்துழைப்பின் பகுதிகள் மற்றும் தற்போதைய பொருளாதார பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கான வழிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கைக்கு சீனாவின் முழு ஆதரவையும் தருவதாக தூதுவர் ஜீ சென் அங் மீண்டும் வலியுறுத்திள்ளதுடன், கடனை மறுசீரமைப்பதில் IMF உடன் இணைந்து பணியாற்றுவதற்கான இலங்கையின் முடிவை சீனா தெளிவாக ஆதரிக்கிறது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முக்கிய பங்குதாரர் என்ற வகையில், இலங்கையின் நிலைப்பாட்டை சாதகமாக பரிசீலித்து, கூடிய விரைவில் ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை ஊக்குவிப்பதில் சீனா ஒரு செயலில் பங்கு வகிக்கத் தயாராக இருப்பதாகவும் சீன தூதுவர் அமைச்சர் அலி சப்ரிக்கு உறுதியளித்துள்ளார்.
இருதரப்புக் கடனை மறுசீரமைப்பது குறித்த கோரிக்கையைக் குறிப்பிடுகையில், முதிர்ச்சியடையும் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தொடர்புடைய நிதி நிறுவனங்கள் மற்றும் துறைகளுடன் கலந்துரையாடல்களை சீனா தீவிரமாக ஆதரிக்கும் என்று சீன தூதுவர் தெரிவித்துள்ளார்.
May you like this video

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
