திருகோணேஸ்வரம் ஆலயத்தில் இறை வழிபாட்டில் ஈடுபட்ட இந்திய நிதி அமைச்சர் (photos)
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டுள்ளார்.
இதேவேளை திருகோணமலையில் State bank of indiaவின் புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வங்கியில் முதல் கணக்கை தொடங்கிய செந்தில் தொண்டமான்
வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbookஐ நிர்மலா சீதாராமன், செந்தில் தொண்டமானிடம் கையளித்துள்ளார்.
மேலும், நிர்மலா சீதாராமன், கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர் IOCஐயும் பார்வையிட்டுள்ளதுடன், இதன்போது gasoil tank no 11, 12 திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















