தேர்தலை ஒத்திவைக்கும் இறுதி முயற்சியில் அரசாங்கம்-எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் தகவல்
உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் இறுதி முயற்சியாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்த திட்டத்திற்கு அமைய எதிர்க்கட்சியை சேர்ந்த சிலரது ஆதரவை பெறுவதற்காக அரசாங்கம மிகப் பெரிய நடவடிக்கையை முன்னெடுத்தள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கும் தகவல்

இதனடிப்படையில் கடந்த சில தினங்களாக எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசாங்கம் தகவல்களை அனுப்பி வருவதாக பேசப்படுகிறது.
எப்படியாவது இந்த யோசனைக்கு தமது கட்சிகளின் தலைவர்களை இணங்க செய்யும் அழுத்தங்களை கொடுக்குமாறு அரசாங்கம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழத் தேசியக்கூட்டமைப்புக்கு அரசாங்கம் இந்த தகவல்களை அனுப்பியுள்ளது.