பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய இரகசிய தகவல் அம்பலம்!
பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை அழிப்பதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தானிடம், பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என கூறியதாக தகவலொன்று வெளியாகியுள்ளதாக பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் மீது தாக்குதல்களை மேற்கொள்ளும் போது இந்தியா கடுமையான தந்திரங்களை மேற்கொண்டது.
பாகிஸ்தானை தாக்க மாட்டோம் என்று வாக்குறுதியளித்த பின்னரும் இந்தியா அவர்களின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்தது. இந்த நடவடிக்கைகள் போரின் போக்கை மாற்றியதாக அவர் கூறினார்.
இந்த போர் இந்தியாவின் முதலீடுகளை நிறுத்தும். பொருளாதார ரீதியில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவே இந்த போர் இந்தியாவிற்கு பாதகமாவே அமையும் எனவும் கூறினார்.
இந்நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா அனுப்பிய இரகசிய தகவல் என்ன? அந்த தகவல் யாரால் வெளிவந்தது? போன்ற பல விடயங்கள் குறித்து இராணுவ ஆய்வாளர் கலாநிதி அருஸ் தெரிவித்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri