தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிக்கு ஆதரவான போராட்டம்! 72 பேர் பலி
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜெக்கப் சுமா சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்டில் ஏற்பட்ட பட்ட அமைதியின்மையால் குறைந்தது 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான பொலிஸார் கடமையில் ஈடுபட்டுள்ளனர். நிறவெறி ஆட்சி முடிவடைந்த 27 ஆண்டுகளில் ஏற்பட்ட கொடூரமான வன்முறை மற்றும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெப்போதும் இடம்பெறாதது என ஜனாதிபதி சிரில் ரமபோசா விவரித்துள்ளார்.
அதேவேளை, 1,200 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் போராட்டக்காரர்களின் இடையூறுகள் தென்னாபிரிக்கா முழுவதும் மருந்துகள் மற்றும் உணவுப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறையை ஏற்படுத்தும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வன்முறை அலை தென்னாபிரிக்காவின் தடுப்பூசி நிலையங்களை தாக்கியுள்ளதுடன், காசநோய் மற்றும் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் மருந்து சேகரிப்பு உள்ளிட்ட அத்தியாவசிய சுகாதார சேவைகளுக்கான அணுகலையும் பாதித்துள்ளது.
அமைதியின்மையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடுப்பூசி போடுவதற்கான நியமனங்கள் உள்ளவர்கள் மீள்பரிசீலனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிகிச்சை நிலையங்கள் சூறையாடப்பட்டதாகவும், கொடூரமான மூன்றாவது அலை கொரோனா தொற்றுநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை ஒட்சிசன் வழங்குவதில் சிக்கல் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்காக தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜெக்கப் சுமாவிற்கு 15 மாத சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் விவகாரம் குறித்த விசாரணைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதை தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2018ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்த சுமாவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தீர்மானங்களை மேற்கொள்ளும் விடயங்களில் வர்த்தகர்கள் அரசியல்வாதிகளுடன் இணைந்து சதிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந் நிலையிலேயே சுமாவின் ஆதரவாளர்களின் கலவரம் கடந்த வாரம் அவரது சொந்த பிராந்தியமான குவாசுலு-நடால் (KwaZulu-Natal) மாகாணத்தில் ஆரம்பமாகி வார இறுதியில் தென்னாபிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜொஹனஸ்பேர்க்கை (Johannesburg) உள்ளடக்கிய கெளடெங் (Gauteng) மாகாணத்திற்கு பரவி இப்பொழுது பாரிய களவரமாக மாறியுள்ளது.
On Wed, 14 Jul 2021 at 10:45, dilshan Vinsan

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
