தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரு முக்கிய புள்ளிகளில் கடும் இழுபறி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள முடிவு
தமிழக சட்டமன்றத்தேர்தல் 2026 இன் வாக்குப்பதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் பல தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்றுமுன் தினம் ( 23) 234 தொகுதிகளில் ஒரே கட்டமாக தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இதற்கமைய, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருந்தாலும், வாக்குப்பதிவு எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் குறைந்துள்ளமை தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் சாதனை அளவாக 85 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகியுள்ளன.
எனினும் முந்தைய தேர்தலை விட பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வளர்ச்சி விகிதம் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகக் குறைவாக பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கமைய, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப்பதிவு உயர்வு விகிதம் 5.5 விகிதமாக மட்டுமே பதிவாகியுள்ளன. இது 2021இல் 6.22 விழுக்காடாகவும், 2016இல் 18.5 விழுக்காடாகவும், 2011இல் 11.4 விழுக்காடாகவும் பதிவாகியுள்ளன.
அதேநேரம் இந்த தேர்தலில் வாக்குப்பதிவுக்கும், தேர்தல் முடிவுக்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளன.
அரசியல் காரணிகளின் தீர்மானம்
இதன்மூலம் வாக்குப்பதிவு எண்ணிக்கையை விட, அரசியல் காரணிகளே தேர்தல் முடிவைத் தீர்மானிப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் கடும் இழுபறி இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 தேர்தலில், இவற்றில் பெரும்பாலான கட்சிகள் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் இணைந்திருந்தன.
எனினும் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் வாக்குகள் பிரியும் சூழல் உருவாகியுள்ளது. இது திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளின் வெற்றி விளிம்பை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலமுனைப் போட்டி நிலவும் போது, குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-தோல்வி முடிவு மாறும் என்பதால், இந்த தேர்தல் முடிவு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தேர்தலை தீர்மானிக்கும் இரண்டு முக்கிய புள்ளிகள்
தமிழகத் தேர்தலை தீர்மானிக்கும் இரண்டு முக்கிய புள்ளிகளான டெல்டா மற்றும் கொங்கு மண்டலம் ஆகிய இரண்டு மண்டலங்களிலும் தவெக-வுக்கு கடும் சவால்கள் இருப்பதாக கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்தப் பகுதிகளில் தற்போது இழுபறி நிலை நீடிப்பதாக கூறப்படுகின்றமை விஜய்க்கு ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கணிப்புகள் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு 60 தொகுதிகள் பாதுகாப்பானவை என்றும் வாக்கு சதவீதம் 30% வரை உயரக்கூடும் என்றும் காட்டுகின்றன.
40 இழுபறி தொகுதிகளும், கட்சியின் வெற்றிப் பாதையைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹோர்முஸ் நீரிணையில் அதிரடி தாக்குதல்! இருபுறமும் முகாமிட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இரவு முழுவதும் விடிய விடிய கதறி அழுதுள்ள எதிர்நீச்சல் சீரியல் புகழ் ஹரிப்பிரியா... அப்படி என்ன நடந்தது? Cineulagam