சிறுகடல் மீனவர்களுக்கிடையில் மோதல்: 4 பேர் வைத்தியசாலையில் - ஐவர் கைது
முல்லைத்தீவு, மாத்தளன் மற்றும் இரணைப்பாலை பகுதிகளை சேர்ந்த சாலை சிறுகடலில் இறால் பிடித்து வரும் மீனவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவர் முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சாலை சிறுகடலில் இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் இறால் கூடு கட்டி இறால் பிடிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்கள் கட்டிய இறால் கூட்டில் இறால்கள் களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் சாலை சிறுகடலுக்கு சென்று அங்கு தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட மாத்தளன் பகுதி மீனவர்களை தாக்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து பதிலுக்கு மாத்தளன் பகுதியினை சேர்ந்தவர்களும் தாக்கியுள்ளார்கள். இந்நிலையில் வாள், கம்பி, கத்தி போன்றன கொண்டு இரணைப்பாலையினை சேர்ந்த மீனவர்கள் மாத்தளன் பகுதி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.
இதன்போது இரணைப்பாலையினை சேர்ந்த மூன்று மீனவர்களும், மாத்தளன் பகுதியைச் சேர்ந்த ஒரு மீனவரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குலின் போது இரண்டு மோட்டார்சைக்கில்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் இரணைப்பாலையினை சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் மேலும் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
