7 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்ட மெஸ்ஸியின் வெற்றி! அதிர்ச்சியில் ரசிகர்கள்
கத்தார் 2022 உலகக் கிண்ண போட்டியில் ஆர்ஜென்டினா அணி வரலாற்று சாதனை படைத்தது வெற்றி கிண்ணத்தை தட்டிச் சென்றது.
இந்த வெற்றியின் களிப்பில் இருக்கும் ரசிகர்களின் மத்தியில் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ரசிகர் ஒருவரின் 7 வருடங்கள் பழமையான டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது.
குறித்த ரசிகரின் டுவிட்டர் பதிவில் ஆர்ஜென்டினா அணியின் வெற்றியும் கால்பந்து உலக ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் சாதனையும் 7 வருடங்களுக்கு முன்பே கணிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய டுவிட்டர் பதிவு
December 18, 2022. 34 year old Leo Messi will win the World Cup and become the greatest player of all times. Check back with me in 7 years.
— José Miguel Polanco (@josepolanco10) March 20, 2015
இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் வைரலாகிய அந்த டுவிட்டர் பதிவு குறித்த ரசிகரால், மார்ச் 21, 2015 ஆண்டு அன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த டுவிட்டர் பதிவில், டிசம்பர் 18, 2022 அன்று ஆர்ஜென்டினாவுடன் உலகக் கோப்பையை மெஸ்ஸி வெல்வார் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் "டிசம்பர் 18, 2022 ஆண்டு 34 வயதான லியோனல் மெஸ்ஸி உலகக் கோப்பையை வெல்வார் மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த வீரராக மாறுவார். 7 ஆண்டுகளில் என்னுடைய பதிவை திரும்பிப் பாருங்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் பெனால்டி முறையில் 4-2 என்ற கணக்கில் பிரான்ஸை ஆர்ஜென்டினா அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது.
இதன்மூலம் 36 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
| உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் வரலாற்று சாதனை படைத்தது ஆர்ஜென்டினா! |
இறுதி போட்டியின் சாதனைகள்
இறுதி போட்டியில் ஆட்டத்தின் ஆரம்பத்திலே கோல் அடித்து மெஸ்ஸி ரசிகர்களுக்கு நம்பிக்கையை வழங்கி போட்டியை விறுவிறுப்பாகினார்.
அதே உற்சாகத்துடன் மெஸ்ஸி இறுதிவரை விளையாடி தனது அணிக்காக 2 கோல்களை அடித்துக்கொடுத்தார்.

அதுமட்டுமன்றி இறுதி முடிவை எட்டுவதற்காக இரு அணிகளுக்கும் ஐந்து வாய்ப்புக்கள் அடங்கிய பெனால்டி முறை வழங்கப்பட்ட போது அணிக்கான முதல் கோலை அடித்துக்கொடுத்தார்.
இதனடிப்படையில் கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் 7 கோல்களை அடித்து,அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.

இதற்கமைய உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் தங்க பந்தை ஆர்ஜென்டினா அணி தலைவர் மெஸ்ஸி பெற்றுக்கொண்டார்.
இதேவேளை பிரான்ஸ் அணியின் வீரர் கைலியன் எம்பாப்வே ஹாட்ரிக் கோல் அடித்து, உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அதிக கோல் அடிக்கும் வீரருக்கு வழங்கப்படும் தங்க காலணியை பரிசாக பெற்றுக்கொண்டார்.
| உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் தங்க காலணியை வென்ற வீரர்! |






பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri