மன்னாரில் இரு ஆலயங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
மன்னாரில் தனிமைப்படுத்தல் விதி முறைகளை மீறி பக்தர்களை ஒன்று கூட்டி திருவிழா திருப்பலி இடம்பெற்ற இரண்டு ஆலயங்கள் இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கற்கடந்த குளம் மற்றும்
அச்சங்குளம் பகுதியில் உள்ள இரண்டு ஆலயங்களிலும் இன்றைய தினம் திருவிழா
திருப்பலி இடம்பெற்றது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பக்தர்களை ஒன்றுகூட்டி திருவிழா மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரண்டு ஆலயங்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இன்றிலிருந்து எதிர்வரும் 14 நாட்களுக்குக் குறித்த இரு ஆலயமும் சுய தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்
உறுதிப்படுத்தியுள்ளார்.




