யானையின் தாக்குதலினால் மூன்று பிள்ளைகளின் தந்தை மரணம்
கஹடகஸ்திகிலிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈத்தல்வெட்டுனுவெவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் யானையின் தாக்குதலினால் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (12) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஈத்தல்வெட்டுனுவெவ- கொக்கபே அணைக்கட்டு பகுதிக்குக் காடு வெட்டுவதற்காக ஐந்து பேர் சென்றதாகவும், காட்டை வெட்டிக்கொண்டிருக்கும் போது யானை தாக்கியதாகவும் இதனையடுத்து குறித்த நபரை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் போது இடையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.தாஜூர் (54வயது) எனவும் தெரியவருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது கஹடகஸ்திகிலிய பிரதேச வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகின்றது.
மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கஹடகஸ்திகிலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதானியின் 4.2 பில்லியன் டொலர் துறைமுகத்தை அழித்த ஈரான் - உலகம் கண்டனம், பாகிஸ்தான் ஆதரவு News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விவாகரத்துக்கு பின் மீண்டும் திரையில் ஒன்று சேரும் சமந்தா - நாக சைதன்யா.. காரணம் என்ன தெரியுமா Cineulagam

இஸ்ரேல்- ஈரான் போருக்கு மத்தியில் பெரிய முடிவை எடுக்கும் வட கொரியா.., உலகிற்கு ஒரு எச்சரிக்கை News Lankasri
