ஏ -9 வீதியில் 2 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
கண்டி - யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் திறப்பனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் அநுராதபுரம், மிஹிந்தலை பகுதியில் வசிக்கும் 38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
சடலமாக மீட்கப்பட்டவர் மெல்சிரிபுர பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில், தனது பணியை முடித்து விட்டு மீண்டும் வீடு நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் வாகனமொன்றில் பயணிக்கும் போது கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்தாரா அல்லது வீதியில் பயணிக்கும் போது வாகனமொன்று மோதி உயிரிழந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
