மட்டக்களப்பில் போதைப்பொருள் வியாபாரிகள் இருவர் கைது
மட்டக்களப்பு நகரில் ஜஸ் போதைப்பொருளுடன் ஈடுபட்டு வியாபாரியான கருவப்பங்கேணியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டு மூன்று வாரத்தில் அதே பகுதியில் வைத்து 21 கிராம் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞரின் தந்தையாரை எதிர்வரும் 25 ம் திகதிவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டு நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (22) உத்தரவிட்டுள்ளது.
பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு ஜெயசிங்கவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் கொஸ்தாப்பர் சமரபந்து தலைமையில் ஜயசிங்க, ரதன் உட்பட்ட குழுவினர் சம்பவ தினமான கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) இரவு நகர் பகுதியில் உள்ள கண்ணகை அம்மன் கோயில் வீதியில் மாறு வேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது பை ஒன்றுடன் நடந்து வந்த குறித்த நபரை கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிசார் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து சோதனை செய்தனர் இதன் போது வியாபாரத்துக்காக எடுத்துச் செல்லப்பட்ட 21 கிராம் ஜஸ் போதை பொருளுடன் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் எனவும் இவரின் 22 வயதுடைய மகன் மற்றும் லயன்ஸ் கிளப் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இருவரை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் கைது குறித்த இளைஞரின் தந்தையாரை கைது செய்த பொலிசார் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 25 ம் திகதிவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.




