பிரபல தமிழ் உதைப்பந்தாட்ட வீரர் திடீரென உயிரிழப்பு (PHOTOS)
இலங்கை தேசிய உதைபந்தாட்ட அணியின் சிறந்த வீரர் டக்சன் புஸ்லாஸ் உயிரிழந்துள்ளார்.
மன்னாரினை சேர்ந்த இவர் இன்று மாலைதீவில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமராட்சி வதிரி டயமன்ஸ் விளையாட்டுக்கழக வீரரும், இலங்கை கால்பந்தாட்ட அணியின் வீரருமாகிய பியூஸின் உயிரிழப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பலரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர். பாடசாலை காலத்தில் மத்திய களத்தில் (CD) தடுப்பாட்ட நுட்பத்துடன் விளையாடும் சிறந்த வீரராக இருந்தார்.
இலங்கை அணியின் தேசிய அணியில் இடம் பிடித்த இவர், கால்பந்து உலக கிண்ண கோப்பைக்கான (FIFA World Cup) தகுதிகான் போட்டியில் இலங்கை தேசிய அணியில் பங்கேற்றுச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
அதே நேரம் இலங்கை தேசிய அணியில் சிறந்த பின் கள வீரராக விளங்கினார்.
கடந்த ஆண்டு இடம்பெற்ற SAFF கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ,இந்திய அணியுடனான போட்டியில் சிறந்த வீரருக்கான விருந்தினை பெற்றுக்கொண்டார். இந்த போட்டி சமநிலையில் முடிவடைந்திருந்தது.
இவ்வருடத்திற்கான மிக பிரபலமான
வீரருக்காக இடம் பெற்ற கருத்து கணிப்பில் ரன்னரப்பாக பியூஸ்லஸ் தெரிவு
செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






ஷாக்கிங் விஷயத்தை கூறிய செந்தில், கோபத்தில் திட்டிவிட்ட மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
