தனக்குத் தானே தீ வைத்து தற்கொலை குடும்பஸ்தர்!
புத்தளம் - தில்லையடி ரத்மல்யாய 2 ஆம் குருக்குத் தெருவில் உள்ள கட்டடமொன்றில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் புத்தளம், தம்பபண்ணி பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையச் சேர்ந்த மின்ஹாஜ் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சி .சி. டி. வி காட்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் போதைக்கு அடிமையாகி, மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படுமென திடீர் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.