முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை
முல்லைத்தீவு(Mullaitivu) - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் கொலனி பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(02.07.2024) இடம்பெற்றுள்ளது.
சுதந்திரபுரம், கொலனி பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய நாகரத்தினம் சுயதீபன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை
குறித்த நபர், நேற்றைய தினம்(02) தனது நண்பர்களுடன் மது அருந்துவதற்காக சென்றுள்ளதுடன் அதிக மது அருந்தி மயங்கிய நிலையில் நண்பர்களால் அவரது வீட்டில் விடப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் விழித்துக்கொள்ளாததை அடுத்து மூங்கிலாறு ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவர் முன்னரே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அங்கு, இன்றைய தினம்(03) மேற்கொள்ளப்பட்ட சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனையின் போது உயிரிழந்தவரின் கழுத்திலுள்ள காயம் அடையாளம் காணப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam