கட்டுநாயக்கவில் கோடாவுடன் சிக்கிய குடும்பஸ்தர்
கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாது கங்கை ரம்ய தொடுபொல பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானம் வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் கோடாவை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுநாயக்க பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் 61 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஆவார்.
மேலதிக விசாரணைகள்
இந்தக் கைது நடவடிக்கையின் போது, மதுபானம் வடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் 3,591,000 மில்லி லீற்றர் அளவுடைய கோடாக்கள் (19 பீப்பாய்கள்) பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டுநாயக்கப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு சிக்கல்... ஐந்தாம் தலைமுறை சக்திவாய்ந்த போர் விமானங்களை உருவாக்கும் இந்தியா News Lankasri
