வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

in the northern and eastern provinces
By Independent Writer Feb 26, 2021 04:18 AM GMT
Independent Writer

Independent Writer

in கல்வி
Report

2021ஆம் ஆண்டு பாடசாலைகளில் முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை விட மிகவும் குறைவானதாகும், இது அபாயகரமானது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் புவனேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கும் தமிழ் பேசும் சமூக அமைப்புகளுக்கும் அனுப்பி வைத்துள்ள செய்தியில் மேலும்,

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்திற்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது.

உலக மக்கள் தொகை வருடந்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான்.

ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலையான விடயம் என்பதற்கு அப்பால் அபாயகரமானது.

நாட்டில் நடைபெற்ற யுத்தமானது நான்கு தசாப்தங்களை கடந்தது. அந்த காலங்களில் கூட பாடசாலைக்கு முதலாம் தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்தே சென்றது.

ஆனால் இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான காரணங்களில் பிறப்பு வீதம் குறைவடைந்தது எனத் தனியாகக் கூறிவிடமுடியாது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் முக்கியமானது.

இதைவிட கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் நகர்ப்புறத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். அதற்குத் தொழில் வாய்ப்பு ஒருகாரணம் என்பதற்கு அப்பால் பாரம்பரிய தொழில்கள் பல அழிவடைந்துள்ளன.

இதனால் வருமானமின்றி பிள்ளைகளை வளர்க்க முடியாத அளவிற்குப் பலர் தள்ளப்பட்டுள்ளனர். அரச சேவையில் உள்ள பலர் வங்கிகளில் பெருமளவு பணம் கடனாகப்பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர்.

இதற்கு அப்பால் நகர்ப்புறங்களில் உள்ள ஒரு சில பாடசாலைகளில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் சேர்க்கப்படுவதும், அப்பாடசாலைகளில் அனுமதியைப் பெறுவதற்குப் பெற்றோர் முண்டியடிப்பதும் அண்மைய காலங்களில் பெரும் பிரச்சினையாக உள்ளது.

இப்பாடசாலை அனுமதிக்காக உயர் பதவிகளில் உள்ளவர்கள்கூட கல்வித் திணைக்களம் என்றும், பாடசாலை என்றும், மனித உரிமைகள் ஆணைக்குழு என்றும் அலைந்து திரிவதையும் பலமணிநேரம் காத்திருப்பதையும் காணமுடிகின்றது.

மொத்தத்தில் பிள்ளைகளைப் பெற்றால் வளர்ப்பது, பராமரிப்பது, பாடசாலைகளில் சேர்ப்பது, கல்வியூட்டுவது, கண்காணிப்பது என்ற சுமைகளை மனதில் கொண்டு பிள்ளைகள் பெற்றுக்கொள்வதைப் பலரும் மட்டுப்படுத்தியுள்ளனர்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பத்துப் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தாயும் எம்மத்தியில் எந்த ஏதுகரமும் இல்லாமல் தனது பிள்ளைகளைச் சிறப்பாக வளர்த்தாள் என்ற சான்றுகள் நிறையவே உள்ளன.

ஆனால் இன்று அரச சேவையில் உள்ள நூற்றுக்கு தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கின்றனர்.

மாதாந்த வருமானமுள்ள அரச சேவையில் உள்ளவர்களே இவ்வாறு மட்டுப்படுத்தினால் வருமானமே இல்லாத பாமர மக்கள் எவ்வாறு குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியும் எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆகையால் சமூக அக்கறை கொண்ட அனைவரும் இதற்கான தீர்வுக்குரிய வழிகளைக்கண்டறிந்து பிறப்பு வீதம் அதிகரிக்க அல்லது சந்ததிப் பெருக்கம் ஏற்பட வழியேற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.  

மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, Penang, Malaysia, Toronto, Canada

22 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை

22 Apr, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

அராலி வடக்கு, Hattingen, Germany

21 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US