வவுனியாவில் அடியோடு முறிந்து வீழ்ந்த மரம்! விபத்தில் இருந்து தப்பிய பேருந்து
வவுனியா ஏ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது.
குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான புளியமரம் இன்று இரவு 8 மணியளவில் அடியோடு சாய்ந்து மின்கம்பத்தையும் சேதப்படுத்திக்கொண்டு ஏ9 பிரதான வீதியின் குறுக்காக விழுந்தது.
குறித்த நேரத்தில் அவ்வீதியால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரச பேருந்து ஒன்றும் பயணித்திருந்தது.
எனினும் மரம் முறிந்துவிழுவதை அவதானித்த பேருந்தின் சாரதி விரைந்து செயற்பட்டு பேருந்தினை வீதியின் கரையால் செலுத்தியமையால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விபத்தினால் ஏ9 வீதியுடனான போக்குவரத்து ஒரு மணிநேரம் தாமதமடைந்திருந்தது.
இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.






பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri