பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள நன்மை! விசேட வைத்திய நிபுணர்கள் வெளியிட்டுள்ள தகவல்
நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"நாட்டில் கடந்த இரு மாதங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டிருந்தது. வைத்தியசாலைகளில் இடமிருக்கவில்லை.
ஒட்சிசன் வழக்குவதிலும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டது. தற்போது இந்நிலைமை மாறியுள்ளது. வைத்தியசாலைகளில் இடம் உள்ளன.
இந்நிலைமையை நாம் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக முழுமையாக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டும். குறிப்பாக இரண்டு தடுப்பூசிகள் பெற்ற பின்னர்கூட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" - என்றார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
