காட்டுக்குள் இரவில் நடந்த மோசமான செயல் - யுவதிகள் உட்பட 21 பேர் கைது
நக்கிள்ஸ் மலைத்தொடரில் அனுமதியின்றி முகாமிட்டு கூடாரம் அமைத்த குற்றச்சாட்டில் 05 யுவதிகளும் 17 இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹுன்னஸ்கிரிய வன அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பண்டாரவளை, கொழும்பு, பதுளை, கண்டி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் அவர்கள் 20-30 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தக் குழுவைச் சேர்ந்த பலரின் ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பேஸ்புக் சமூக ஊடகங்கள் ஊடாக இணைந்துள்ளனர்.
நக்கிள்ஸ் வனப்பகுதி
அவர்கள் இணைந்து இந்தக் கூடாரங்களை அமைப்பதற்கு அனுமதியின்றி நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் நுழைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த குழுவினர் நக்கிள்ஸ் வனப்பகுதிக்குள் இரவு நேரத்தில் அத்துமீறி நுழைந்து கூடாரம் அமைத்து நெருப்பு கொளுத்தி விருந்தில் ஈடுபட்டதாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாதுகாப்பு துறையுடன் தொடர்புடையவர் என கூறப்படும் நபர் மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்களும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam